Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய திருநாட்டின் சுதந்திரத் திருநாள் விழாவானது வரும் 15.8.2023 அன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
நெகிழியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது. இந்திய திருநாட்டின் தேசியக் கொடிக்கு மரியாதை செய்யும் விதமாக, பருத்தி, பாலியெஸ்டர், பட்டு மற்றும் காகிதம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேசியக் கொடியின் பயன்பாடு முடிந்தவுடன் அதனை தரையில் போட்டு விடாமல் அதன் கண்ணியத்திற்கு குறைவு ஏற்படாத வகையில் அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு ச.உமா தெரிவித்துள்ளார்.